Friday, September 18, 2009

Actress Bhavana Paired with Ajith on Asal


Once Again Ajith join with Asal ajith


Simbu joined with Ajith in ASAL




Ajith's 50th Film was directed byAlagiri's Son Durai Dhayanithi


posted by thinakaran daily paper.

Nayanthara decides to act on malayalam films -after aathavan release


சூர்யாவுடன் ஆதவனில் நடித்து வரும் நயன்தாரா மலையாளத்தில் திலீப்புடன் பாடிகாட் படத்திலும் நடித்து வருகிறார். ஒரே நேரத்தில் தமிழ், மலையாளம் என்று கலக்கி வரும் நயன்தாராவுக்கு சமீப காலமாக மலையாளம் மீது தீராப் பற்று வந்து விட்டதாம். பாடிகாட் படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் ரசிகர்கள் கொடுக்கும் வரவேற்புதான் இந்த பற்றுக்கு காரணம். சமீபத்தில் ஓணம் பண்டிகையை குடும்பத்துடன் சொந்த ஊரில் கொண்டாடிய அவர் தொடர்ந்து மலையாள படங்களில் கவனம் செலுத்த திட்டமிட்டிருக்கிறாராம். விரைவில் புதிய படம் குறித்த அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.

Kamalhasan beats pyramid sai meera rao


மர்மயோகி பட விவகாரம் தொடர்பாக கமல்ஹாசன் தங்களிடம் வாங்கிய ரூ.10 கோடியே 90 லட்சத்தை வட்டியுடன் சேர்த்து தரக்கோரி நடிகர் கமல்ஹாசனுக்கு பிரமீட் சாய்மீரா அனுப்பிய வக்கீல் நோட்டீசுக்கு கமல்ஹாசன் அதிரடி பதில் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உன்னைப்போல் ஒருவன் பட ரீலிசுக்கு எதிராக வெளியாகியிருக்கும் செய்திகள் தவறானவை. ஓராண்டுக்கும் மேலாக மர்மயோகி படத்துக்காக நான் உழைத்தேன். அந்த காலகட்டத்தில் வேறு எந்த படத்திற்கும் நான் பணியாற்றவில்லை. இதனால் எனக்கு ரூ.40 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டது. இதுதொடர்பாக கடந்த எப்ரல் மாதம் 12ம்தேதி நோட்டீஸ் அனுப்பினேன். அதற்கு எந்த பதிலும் தெரிவிக்கவில்லை என்று கூறியுள்ளார். எந்த கோர்ட்டும் எங்கள் நிறுவனத்துக்கு தடை விதிக்கவில்லை என்றும் கமல்ஹாசன் கூறியிருக்கிறார

Ameer specialy invites 250 Asst Director for yogi release


தான் நடித்து வெளியாகவிருக்கும் யோகி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு 250 உதவி இயக்குனர்களை அழைத்து அசத்தியிருக்கிறார் டைரக்டர் அமீர். யோகி படத்தின் ஆடியோ வெளீயீட்டு விழா சென்னை சத்யம் தியேட்டரில் இன்று நடந்தது. வேறு எந்த விழாவிலும் இல்லாத அளவு இந்த விழாவில் சுமார் 250 உதவி இயக்குனர்கள் கலந்து கொண்டனர். வழக்கமாக வி.ஐ.பி.,க்களுக்கு அளிக்கப்படும் இருக்கைகளில் உதவி இயக்குனர்கள் உற்சாகமாக அமர்ந்திருந்தது பல வி.ஐ.பி.,க்களின் கவனத்தையும் ஈர்த்தது. இதுகுறித்து அமீரிடம் கேட்டால், ஒரு கட்டிடத்துக்கு பில்லர் எவ்வளவு முக்கி‌யமோ... அந்த அளவுக்கு ஒரு படத்தக்கு உதவி இயக்குனர்கள் முக்கியம். அவர்களுக்கு மரியாதை செய்யும் விதத்தில் அனைத்து உதவி இயக்குனர்களுக்கும் அழைப்பிதழ் கொடுத்து அழைப்பு விடுத்தேன், என்று கூறி புன்னகைக்கிறார். யோகி படத்துக்கு ஏகபோக வரவேற்பு இருப்பதால் அடுத்தும் படத்தில் நடிப்பீர்களா? என்ற கேள்விக்கு பதில் அளித்த அமீர், கண்டிப்பாக நடிக்க மாட்டேன். நான் அடுத்து இயக்கவுள்ள படம் கண்ணபிரான். ஜெயம் ரவி நாயகனாக நடிக்கிறார். நாயகியை இன்னும் முடிவு செய்யவில்லை, என்றார்.

Actorsvikranth Marriage decided on 21st October 2009


நடிகர் விக்ராந்த்திற்கும், டிவி நடிகை மானசாவுக்கும் வருகிற அக்டோபர் 21ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. நடிகர் விஜய்யின் சித்தி மகன் விக்ராந்த். இவர், கற்க கசடற என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகம் ஆனார். எங்கள் ஆசான், நெஞ்சத்தை கிள்ளாதே உள்பட பல படங்களில் நடித்துள்ளார். இவருக்கும், பிரபல ஒளிப்பதிவாளர் ஹேமச்சந்திரனின் மகள் மானசாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இவர்களது திருமணம் அக்டோபர் 21ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. முன்னதாக 20ம் தேதி மாலை மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

Thrisha's New super plan


நடிகை த்ரிஷா ஷாப்பிங் பண்ணுவதில் கூட சூப்பர் ப்ளானை கடைபிடித்து வருகிறார். பேஷன் குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், எனக்கு பேஷன் பிடிக்கும். பேஷன் விஷயங்களில் நான் எப்பவுமே அப் டூ டேட்டா இருப்பேன். எனக்கு பிடிச்சது மேற்கத்திய உடைகள்தான். பிடிச்ச ஷாப்பிங் ஸ்பாட் துபாய்தான். எப்படியும் வருஷத்தில் ஒரு தடவையாவது துபாய்ல டூயட் சூட்டிங் இருக்கிறதால, அப்பவே பர்ச்சேஸ் முடிச்சிருவேன். மாடர்ன் டிரஸ்தான் எனக்கு நல்லா இருக்கும்னாலும் கல்யாணம் மாதிரியான விழாக்கள்னா நிச்சயம் சேலைதான் கட்டுவேன். தங்க நகைககள்ல எனக்கு எப்பவுவே பெரிய ஈடுபாடு கிடையாது. என் சின்ன கழுத்துக்கு பெரிய நகைகள் எடுபடாது. மெல்லிய செயின்தான் ‌போட்டுப்பேன், என்று கூறியுள்ளார். (சூட்டிங் ஸ்பாட்டையே ஷாப்பிங் ஸ்பாட்டா ஆக்கிட்டீங்களாக்கும்)

After kandhasamy film vikram decided to act two years once one film.


சீயானாக இருந்த விக்ரம் கந்தசாமிக்கு பிறகு சூப்பர் ஹீரோவாகி விட்டார். மெகா ஹிட் படமான சிவாஜியின் வசூலையே மிஞ்சி விட்டது என்ற பப்ளிசிட்டி ஒருபுறமும், படம் பார்க்க வரும் குழந்தைகளுக்கு சேவல் மாஸ்க் இலவசம் என்ற அறிவிப்பு இன்னொருபுறமும் கந்தசாமியை வளர்த்து வருகிறது. கந்தசாமி வெற்றி பற்றி விக்ரமிடம் கேட்டால், காசி, அந்நியன், பிதாமகன் போன்ற படங்களுக்கு உழைத்தது போலவே இந்த படத்திற்காகவும் உழைத்தேன். என்னுடைய உடல் உழைப்பு வீண் போகவில்லை. கந்தசாமி ஸ்டைலாக வரவேண்டும் என்பதற்காக பல நாட்கள் ஏ.சி. அறை சிறைவாசம் இருந்தேன். படம் நன்றாக வந்திருக்கிறது என்பதுடன் என்னுடைய ரசிகர்கள் இன்னும் எதிர்பார்க்கிறார்கள் என்பதும் புரிகிறது. எனவே இனி 2 வருடத்திற்கு 5 படங்கள் என்று திட்டமிட்டு உழைக்கப் போகிறேன், என்கிறார். நான் எப்பவுமே சீயான்தான் என்று சொல்லும் விக்ரமிற்கு சீயான் என்று கூப்பிட்டால்தான் பிடிக்குமாம்

Dont Talk about Election-super star Rajnikanth.


அரசியலில் ஈடுபடும் எண்ணம் எதுவும் இல்லை என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியிருக்கிறார். தேர்தல் வரும்போதெல்லாம் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்த எதிர்பார்ப்பு ஏற்படும். அதேபோல ரஜினியின் புதிய படம் ரீலிஸின் போதும் படத்தில் தலைவர் ஏதாவது அரசியல் பற்றி பேசியிருக்கிறாரா? என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள். ஆனால் அதற்கு மாறாக இப்போது ரஜினிகாந்த் அரசியல் குறித்து பேசியிருக்கிறார். சமீபத்தில் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல், ரஜினிகாந்த் காங்கிரஸில் சேர்ந்தால் வரவேற்போம் என்று பேட்டியளித்தார். ராகுலின் கருத்திற்கு ரஜினியின் பதில் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையேயும், அரசியல் பிரமுகர்களிடையேயும் இருந்து வந்தது. இந்நிலையில் அரசியல் பிரவேசம் குறி்த்து ரஜினி அளித்துள்ள பேட்டியில், ராகுலின் அழைப்புக்கு நன்றி தெரிவிச்சுக்கிறேன். அரசியல்ல ஈடுபடும் எண்ணம் எதுவும் இப்போதைக்கு இல்லை. அரசியல் வாழ்க்கை பற்றி முடிவெடுத்தால் அதுபற்றி (காங்கிரசில் சேருவது பற்றி) யோசிப்பேன், என்று கூறியுள்ளார்.

Vijay voice-NO idea On Politics


நடிகர் விஜய் நேரடியாக அரசியலில் ஈடுபடும் எண்ணம் இப்போதைக்கு இல்லை என்றும், மக்கள் இயக்கத்தை வலுப்படுத்தப் போவதாகவும் அறிவித்துள்ளார்.

தமிழ்த் திரையுலகில் ரஜினிக்கு பிறகு அரசியல் பிரவேச சர்ச்சையில் அதிக நாட்கள் சிக்கியவர் நடிகர் விஜய். கடந்த சில ஆண்டுகளாகவே விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்த செய்திகள் அடிக்கடி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுலை விஜய் சந்தித்து பேசியதன் மூலம் பரபரப்பு மேலும் அதிகரித்தது. இந்நிலையில் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ராகுல், விஜய் காங்கிரஸில் சேர்ந்தால் வரவேற்போம் என்று அழைப்பு விடுத்தார். இதனால் விஜய்யின் அரசியல் பிரவேசம் உறுதி என செய்திகள் வெளியாயின.

தன்னைச் சுற்றி வரும் இந்த அரசியல் பிரவேச சர்ச்சைக்கு இன்று விஜய் முற்றுப்புள்ளி வைத்தார். சென்னையில் இன்று நிருபர்கள‌ை சந்தித்த விஜய், இப்போதைக்கு அரசியலில் நுழையும் எண்ணம் இல்லை. எனது பெயரில் இருக்கும் மக்கள் இயக்கத்தை வலுப்படுத்த வேண்டும். காங்கிரஸ் கட்சியின் பார்வை இப்போது இளைஞர்கள் பக்கம் இருக்கிறது. என்னுடைய பார்வையும் இளைஞர்கள் பக்கம்தான் இருக்கிறது. மக்களுக்கு நல்லது செய்யும் கட்சிக்கு ஆதரவாக இருப்பேன், என்று தெரிவித்தார்.

விஜய் கண்டிப்பாக அரசியலுக்கு வருவார் என்று அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக சொல்லி வரும் நிலையில், விஜய் அரசியிலில் ஈடுபடும் எண்ணம் இப்போதைக்கு இல்லை என்று அறிவித்திருக்கிறார். விஜய்யின் இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

நடிகர் விஜய் கடந்த ஆண்டு பிறந்த நாளின்போது விஜய், ரசிகர் மன்ற கொடியை அறிமுகப்படுத்தினார். மக்களுக்கு உதவும் இயக்கமாக தனது ரசிகர்கள் ஓருங்கிணைய வேண்டும் என்றும் ரசிகர்களுக்கு உத்தரவிட்டார். இந்த ஆண்டு பிறந்த நாளில் ஏழை மாணவர்களுக்கு உதவும் வகையில் கம்ப்யூட்டர் மையங்களை திறந்தார். தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் விஜய் நற்பணி இயக்கம் சார்பில் இலவச கம்ப்யூட்டர் மையம் திறக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது

Vijay screwed On the shooting of 50th Film sura



இயக்குனர் அமீர் கதாநாயகனாக நடித்திருக்கும் யோகி படத்தின் ஆடீயோ வெளியீட்டு விழாவில் பேசிய சேரன், யோகி படத்தை நான் முழுவதுமாக பார்த்து விட்டேன். இங்கே உள்ள நடிகர்கள் வருத்தப்படக் கூடாது. ஒரு சில காட்சியில் எந்த கதாநாயகனும் செய்ய முடியாததை அமீர் செய்து இருக்கிறார் என்று போகிற போக்கில் ஒரு தகவலை கொளுத்திப் போட., அது மேடையில் இருந்த ஜெயம்ரவி, சிம்பு, ஜே.கே.ரித்திஷ் எம்.பி., உள்ளிட்டவர்களை உசுப்பி விட்டுவிடும் என அனைவரும் எதிர்பார்த்தனர். அப்போது பேசுவதற்காக மைக்கை பிடித்த சிம்பு, நல்ல இயக்குனர் கிடைத்தால் நடிப்பது ஈஸி. ஆனால் இயக்குவது, நடிப்பது இரண்டுமே கஷ்டமில்லை.. என்று கூறியதுடன், தன் பங்குக்கு, பருத்திவீரன் படம் முழுக்க நடிகர் கார்த்தி மூலம் இயக்குனர் அமீர்தான் தெரிந்தார். அந்த அளவிற்கு பிறரையே இயக்கத் தெரிந்தவர்... இதில் எப்படியெல்லாம் நடித்திருப்பார்.. என இமேஜின் பண்ண முடிகிறது என மேடையில் இல்லாத நடிகர் கார்த்தியை வம்புக்கு இழுத்து அமர்ந்தார்

SImbu make trouble on yogi audio cassete release.


இயக்குனர் அமீர் கதாநாயகனாக நடித்திருக்கும் யோகி படத்தின் ஆடீயோ வெளியீட்டு விழாவில் பேசிய சேரன், யோகி படத்தை நான் முழுவதுமாக பார்த்து விட்டேன். இங்கே உள்ள நடிகர்கள் வருத்தப்படக் கூடாது. ஒரு சில காட்சியில் எந்த கதாநாயகனும் செய்ய முடியாததை அமீர் செய்து இருக்கிறார் என்று போகிற போக்கில் ஒரு தகவலை கொளுத்திப் போட., அது மேடையில் இருந்த ஜெயம்ரவி, சிம்பு, ஜே.கே.ரித்திஷ் எம்.பி., உள்ளிட்டவர்களை உசுப்பி விட்டுவிடும் என அனைவரும் எதிர்பார்த்தனர். அப்போது பேசுவதற்காக மைக்கை பிடித்த சிம்பு, நல்ல இயக்குனர் கிடைத்தால் நடிப்பது ஈஸி. ஆனால் இயக்குவது, நடிப்பது இரண்டுமே கஷ்டமில்லை.. என்று கூறியதுடன், தன் பங்குக்கு, பருத்திவீரன் படம் முழுக்க நடிகர் கார்த்தி மூலம் இயக்குனர் அமீர்தான் தெரிந்தார். அந்த அளவிற்கு பிறரையே இயக்கத் தெரிந்தவர்... இதில் எப்படியெல்லாம் நடித்திருப்பார்.. என இமேஜின் பண்ண முடிகிறது என மேடையில் இல்லாத நடிகர் கார்த்தியை வம்புக்கு இழுத்து அமர்ந்தார்

Kamalhasan Shouted: Am not use marmayogi's fund for making unai pol oruvan...



மர்மயோகிக்காக பிரமிட் சாய்மீராவிடம் வாங்கிய பணத்தை உன்னைப்போல் ஒருவன் படத் தயாரிப்புக்கு பயன்படுத்தவில்லை என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார். மர்மயோகி படம் தொடர்பாக பிரமிட் சாய்மீரா நிறுவுனம் கமல்ஹாசன் மீது சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள உன்னைப்போல் ஒருவன் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் சாய்மீரா கோரிக்கை வைத்துள்ளது. உன்னைப்போல் ஒருவன் ரீலிஸ் ஆகுமா, ஆகாதா? என்ற குழப்பத்தில் ரசிகர்கள் இருக்கும் நிலையில், சாய்மீராவின் குற்றச்சாட்டுக்கு கமல்ஹாசன், ஐகோர்ட்டில் பதில் அளித்துள்ளார். வழக்கு விசாரணையின்போது கமல்ஹாசன் சார்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், போதிய நிதி ஆதாரம் இல்லாமல் "மர்மயோகி' படத்தை இணைந்து தயாரிப்பதற்காக பிரமிட் சாய்மீரா நிறுவனம் எங்களுடன் ஒப்பந்தம் செய்துகொண்டது. "ராஜ்கமல் பிலிம்ஸ்' சார்பில் "மர்மயோகி' படத்துக்கு ஏராளமான பணம் செலவழிக்கப்பட்டது. ஆனால், போதிய பணம் இல்லாத காரணத்தால் படம் கைவிடப்பட்டது. வேறு படங்களில் கவனம் செலுத்தக் கூடாது என்ற நிபந்தனை காரணமாக கமலுக்கு ஓர் ஆண்டு வருமானம் (ரூ.40 கோடி) இழப்பு ஏற்பட்டது. "மர்மயோகி' படத் தயாரிப்புக்காக வழங்கப்பட்ட பணம், அந்தப் படம் ரீலிஸ் ஆகவில்லை என்றாலும் திரும்ப வழங்கப்படும் என்று எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை."மர்மயோகி' படத்துக்காக வழங்கப்பட்ட பணம் "உன்னைப் போல் ஒருவன்' படத் தயாரிப்பில் பயன்படுத்தப் படவில்லை. "பிரமிட் சாய்மீரா' நிறுவனம் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளது. எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும், என்று கூறப்பட்டுள்ளது.

Aaathavan surya's wonderful habit.




‌தான் நடிக்கும் படங்களில் பணியாற்றும் உதவி இயக்குனர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் அன்பளிப்பு கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார் நடிகர் சூர்யா. பொதுவாக நடிகர்கள் தன்னை வைத்து ஹிட் படம் கொடுக்கும் டைரக்டர்களுக்கு பரிசளிப்பது வழக்கம். எல்லா விஷயத்திலும் வித்தியாசத்தை விரும்பும் சூர்யா, இந்த அன்பளிப்பு விஷயத்திலும் வித்தியாசத்தை கடைபிடிக்கிறார். தான் நடிக்கும் படங்களில் பணியாற்றும் உதவி இயக்குனர்களுக்கு பார்ட்டி வைத்து உற்சாகப்படுத்துவதுடன், தலா ரூ.25 ஆயிரம் அன்பளிப்பு கொடுத்து அசத்துகிறார். இதனால் சூர்யா நடிக்கும் படங்களில் பணியாற்றும் உதவி இயக்குனர்களின் உற்சாகத்துக்கு பஞ்சமில்லையாம்.

பிரான்சில் அசல் சூட்டிங் : அதிரடியாக புறப்படுகிறார் அஜித்


சிவாஜி புரொடக்ஷன்ஸ் சார்பில் டைரக்டர் சரண் இயக்கத்தில் உருவாகி வரும் படம் அசல். இப்படத்தின் நாயகன் அஜித். அவருக்கு ஜோடியாக சமீரா ரெட்டி, பாவனா நடிக்கிறார்கள். அசல் படத்தின் முதல் கட்ட சூட்டிங் மலேசியாவில் நடந்தது. தற்போது அடுத்தகட்ட சூட்டிங் பிரான்சில் நடக்கவுள்ளது. இதற்காக அஜித் பிரான்ஸ் செல்கிறார். அங்கு நடக்கும் சூட்டிங்கில் பங்கேற்கும் அஜித், அக்டோபர் 8ம்தேதி சென்னையில் நடைபெறும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் அகில இந்திய மாநாட்டில் பங்கேற்க உள்ளார். அசல் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்த திட்டமிட்டிருக்கிறார் டைரக்டர் சரண்.

Director susiganesan Joined with AGS Groups TO Take his next film.

SUSI GANESAN MINGLED WITH AGS FOR NEXT FILM.
After The Relaease Of kandhasamy film.Director susiganesan Planed to take rest on abroad with his whole family members.After the return from abroad he plan to join with The thiruttu payaley Film AGS groups to take his next High budget film..

He make a secret of that film hero and heroines and also he got the advance for that film.
Kollywood Updates © 2008 Template by:
Kollywood updates